சுமங்கல டயஸ் விமானப்படை தளபதியானார்!

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அவருக்கான நியமனத்தை வழங்கினார். சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்த எயர் மார்ஷல் கபில ஜயம்பதி நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள நிலையிலேயே புதிய தளபதியாக எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 1984ஆம் ஆண்டு, சிறிலங்கா விமானப்படையின் விமானிகள் பிரிவில் இணைந்து கொண்ட எயர் மார்ஷல் சுமங்கல டயஸ், 1986ஆம் ஆண்டு பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான், … Continue reading சுமங்கல டயஸ் விமானப்படை தளபதியானார்!